×

டிரைவர் மீது சரமாரி தாக்குதல் போக்குவரத்து கழக ஊழியர்கள் மறியல்

துரைப்பாக்கம்: மாநகர பஸ் டிரைவரை தாக்கியவர்களை கைது செய்யகோரி சக டிரைவர்கள், கண்டக்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் செம்மஞ்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை மாநகர பேருந்து (த.எ.119) கிண்டிக்கு புறப்பட்டது. டிரைவர் விஜயகுமார் பேருந்தை ஓட்டினார். பேருந்து நிலைய நுழைவாயிலில் இருந்து பேருந்து வெளியே வந்தபோது, திடீரென அதில் ஏறிய 2 மர்ம  நபர்கள், டிரைவரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர்.

 இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர் பேருந்தை நிறுத்திவிட்டு, தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சாலை மறியலில் ஈடுபட்டார். இதுபற்றி அறிந்த சக டிரைவர்களும், கண்டக்டர்களும் இவருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, டிரைவர் விஜயகுமாரை தாக்கிய ஆசாமிகளை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த செம்மஞ்சேரி போலீசார், டிரைவரை தாக்கியவர்களை கைது செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரைவரை தாக்கிய நபர்களை தேடி வருகின்றனர்.


Tags : Strikes Transport Corporation , Volleyball attack on driver Strikes Transport Corporation employees
× RELATED தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பில் சாதித்த மாணவி: குவியும் பாராட்டுகள்